நீ என் அருகில் இருந்தால் போதும் என் வாழ்வையே உனக்கு அளிக்கிறேன் என்றது காதல் காலம்,
உன் குரல் கேட்டால் மட்டும் போதும் அலுவலகம் என்னை அழைக்கிறது என்றது நாம் இன்று வாழும் அவசர காலம்!
காதல் என்பது பூ என்றார்கள்,
அதனால் காதலர்கள் சுலபமாக ஏந்தி கொண்டார்கள்!
திருமணம் என்பது பூக்கள் சேர்ந்த மாலை என்றார்கள்,
ஒரு நாள் சுமந்ததில் வலி தெரியவில்லை
தினம் சுமக்க, சுகமும் சுமை ஆனது!
தினம் சுமக்க, சுகமும் சுமை ஆனது!
காதலென்னும் பூக்கள் வாட திருமண மாலை மெலிந்தது,
பூக்கள் உந்திர்ந்தால் மாலைக்கு அழகில்லை,
காதல் நீங்கினால் மணவாழ்க்கையில் இனிமை இல்லை!
நான் மீண்டும் மலர்ந்து பூவாக வருகிறேன்
எனக்கு மணம் இல்லை என்ற போதும் உன் மனம் என்னை ஏற்குமா???
- இப்படிக்கி வேகமான காதல்

well said!
ReplyDelete